Amazon

 My Amazon Novels 

1)நான் முதல் முதலில் எழுதின கதை தீயோடு நீரும்... ஆக்ஷன் சஸ்பென்ஸ்னு ஒரு அட்வென்சர்ஸா போகும்... நிறைய கேரக்டர்ஸ் நிறைய சீன்ஸ் என்று அப்படியே கதை அது பாட்டுக்கு போயிட்டே இருக்கும்... அதை எழுதி முடிக்கிறதுக்கு இன்னும் இரண்டு கதையை எழுதி முடிச்சிட்டேன்

(Not updated in amazon )

2)நினைவோடு உறவாட - ஒரு பொண்ணு எந்த அளவுக்கு தனது காதலுக்காக, காதலனுக்காக காத்திருப்பா அவனுக்காக என்னெல்லாம் எக்ஸ்ட்ரீமா செய்வான்னு சொல்ற நாவல் ...(readers favorite)

நினைவோடு உறவாட

3)ஹரியின் அழகனே - தன்னோட காதல் கணவனுக்காக ஆண் வேடத்தில் அவர்கள் வீட்டிற்குள் போகும் ஹீரோயினி ஓட காதல்.

ஹரியின் அழகனே

4)இளம்பரிதியின் இளமலரே - நினைவோடு உறவாட மாறி ஒரு ஃபேமிலி லவ் ட்ராமா எழுதணும்னு நினைச்சு எழுதினது... அது கூட கொஞ்சம் அட்வெஞ்சர்ஸும் கலந்து நல்லபடியாகவே முடிச்சேன்... இதுவும் கொஞ்சம் ஆன்டி ஹீரோ ஸ்டோரி தான். 

இளம்பரிதியின் இளமலரே

5)என் கண்ணின் மணி நீயோ - ஆன்டி ஹீரோ ஸ்டோரி ஆதிக்கம் அதிகமா இருக்கவே அப்படி என்னடா இருக்கு அதில்.நாமளும் எழுதுவோம்னு எழுதின ஸ்டோரி ( நான் முதல் முதலில் அமேசானில் அப்லோட் பண்ண ஸ்டோரியும் இதுதான்)

என் கண்ணின் மணி நீயோ

6)காரிகையின் கண்ணாளனே - என் கண்ணின் மணி நீயோவில் வரும் அதிரண் அதிரூபனின் லவ் ஸ்டோரி

காரிகையின் கண்ணாளனே

7)ப்ரொபஸரான விக்ரமசேனாவிற்கும் அவனது மாணவியான குழலினிக்கும் இடையே ஏற்படுற காதல் கதை தான் உயிர் கொடு என் உறவே.... 

உயிர் கொடு என் உறவே

8)காதல் கள்ளியே 

உயிர் கொடு என் உறவே ஸ்டோரிகள் வர சந்துரு நந்தினி லவ் ஸ்டோரி.. தனிக்கதையாவும் இவங்களை வாசிக்கலாம்..

      கல்லூரி தோழன் மற்றும் முதல் காதலான சந்துருவை மறக்க முடியாமல் திருமணத்தன்று அவனை தேடி செல்லும் நந்தினி தேவி காதலை ஏற்பானா சந்துரு சக்கரவர்த்தி????? 👇👇👇

காதல் கள்ளியே

9)உயிர் கொண்ட ஓவியம்- கதை தலைப்புக்கு ஏத்த கான்செப்ட் தான். உயிர்ப்போடு இருக்கிற ஒரு ஓவியத்தை தேடி சென்ற ஏழு பேரோட கதை... அந்த ஓவியத்திற்கும் தேடி சொல்றவங்களுக்கும் இருக்கிற கனெக்சன்... எப்படி எழுதினேன்னே தெரியல இப்ப படிச்சாலும் புதுசா படிக்கிற மாதிரி இருக்கும்... தன் புகழ்ச்சி இல்ல உண்மைதான்... ஆனா எதிர்பார்த்த அளவுக்கு ரீச் கிடைக்கல...

உயிர் கொண்ட ஓவியம்

10)முரணே என் பனிமலரே - இந்த கதை எழுதினதே ஒரு ஆச்சரியம் தான். நான் எழுதுற கதை எல்லாம் ரொம்ப ரொம்ப பெருசா இருக்கும் ஆனால் fb அறிமுகமாகி சைட்டில் நிறைய கதை படிக்கும் போது அதிகமா 30 35 40 அத்தியாயம் குள்ள முடிச்சுட்டு இருந்தாங்க.. என்னடா அப்பன்னா நம்ப ரொம்ப ஓவரா தான் எழுதறமோ... என்ற எண்ணம்..

    சரி நம்பலும் ட்ரை பண்ணி பார்ப்போம் அப்படின்னு சொல்லி 30 அத்தியாயத்தில் முடித்த ஒரு ஃபீல் குட் ஸ்டோரி... எப்ப பாத்தாலும் காதல் உறவு சண்டையில் எழுதறோமே வேற ஏதாவது எழுதலாம்னு ஒரு சமூக கருத்தை எடுத்து ஒழுங்கா ப்ரசண்ட் பண்ணி இருக்கேன் என்ற நம்பிக்கை இருக்கு 

முரணே என் பனிமலரே

Comments